இஞ்சியின் மருத்துவ குணங்கள்..................
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
௳........
நான் உங்கள் மூலிகை பேசுகின்றேன்......
என் பெயர் இஞ்சி................
நூறு மருத்துவர்கள் இருக்காங்க - கால் கிலோ இஞ்சில........!
இஞ்சியை, கறிக்கும், தேநீர்க்கும் மட்டுமே பயன்படுத்துகின்றோம்.
*பாருங்க நம்ம வீட்டில் கொஞ்சம் இஞ்சி இருந்தால்.....!
உங்களுக்கு எவ்வளவு வீன் செலவு மிச்சம் என்று..........!!!!!
*நோய்களை நீக்குவதில் இஞ்சி சிறப்பாக செயல்படுகின்றன.........
௧. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
௨. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
௩. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
௪. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
௫. இஞ்சியை, புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், செரிமாண பிரச்சினை, வாய் நாற்றம் போன்றவை தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
௬. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.
௭. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
௮. பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
௯. இஞ்சி சாற்றோடு, தேன் கலந்து மிதமாக சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.
௧०. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
௧௧. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட செரிமாணம் நன்கு ஏற்படும்.
௧௨. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
௧௩. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
௧௪. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
௧௫. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
௧௬. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்சு வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆசுதுமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
"நோய்யற்ற வாழ்வே குறையற்ற செல்வம்"
நன்றி ..........!
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
0 Response to "இஞ்சியின் மருத்துவ குணங்கள்.................."
கருத்துரையிடுக