வீட்டு வைத்திய குறிப்புகள்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

வீட்டு வைத்திய குறிப்புகள்:-


சீரகம்:

    சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்து தூள் செய்து கொதிநீரில் இட்டு காய்ச்சிக் குடித்தால் உண்ட உணவை சீரணமாக்கி பசியைத் தூண்டுவதுடன் உணவுப்பாதையையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. கேரளத்து மக்கள் எல்லோரது வீட்டிலும் இந்த சீரக வெள்ளம் இருக்கும்.


தொண்டைக்கட்டிற்கு:

    அதிமதுரத்தை நாட்டு மருந்து கடையில் வாங்கி இடித்து சலிக்கவும். ஒரு வேலைக்கு அரை தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.

அசீரணம்:

    அரை தேக்கரண்டி  இஞ்சி சாறு, அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு, அரை தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் அசீரனக் கோளாறுகள் மறையும்.

கால் ஆணிக்கு:

    மருதாணி இலைகள், சிறிது வசம்பு, சிறிய மஞ்சள் துண்டு மூன்றையும் நன்கு அரைத்து ஒரு வெற்றிலையில் வைத்து கால் ஆணிடில் வைத்து ஒரு துணியால் கட்டி வந்தால் ஒரு வாரத்தில் குணமாகி விடும்.

தேமல் மறைய:

    புடலங்காயை 6 அங்குலத்திற்கு வெட்டி, குடலை நீக்கி, சீயக்காயை அரைத்து அதனுள்ளே வைத்து, வெய்யிலில் ஒரு நாள் காய வைக்கவும். மறு நாள் அதை அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவி சில மணி நேரம் ஊறவைத்து வெந்நீரில் குளிக்கவும். தொடர்ந்து இது போல செய்து வந்தால் சில தினங்களில் தேமல் மறைந்து விடும்.


தலைவலி:

    ஒரு தேக்கரண்டி  கிராம்பையும் ஒரு சிட்டிகை கல் உப்பையும் அரைத்து பற்று போட்டால் தலைவலி சரியாகும்.

விக்கலுக்கு:


    சீனியை வாயில் போட்டு மெதுவாக உறிஞ்சவும். விக்கல் நின்று விடும். 2 நிமிடம் கழித்து மறுபடியும் இது போல செய்யலாம். குழந்தைகளின் விக்கலுக்கு விரலை நீரில் நனைத்து சீனியில் தொட்டு வாயில் வைக்கவும்.

மலச்சிக்கல்:

    வெங்காயத்தையும் முள்ளங்கியையும் அடிக்கடி சமையலில்  சேர்த்துக்கொள்ளவும். அதிமதுரம், ரோசா மொட்டு, சோம்பு சம பங்கு எடுத்து பொடி  செய்து ஒரு  தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து சாப்பிடவும். 

                          நன்றி........!

0 Response to "வீட்டு வைத்திய குறிப்புகள்"

கருத்துரையிடுக